IMG 20220624 WA0060
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தின் போராட்டம் நிறைவு!

Share

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சாலைகளில் டீசல் நிரப்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்து இன்றைய தினம் தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் வடபிராந்திய பிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் 750 வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 போக்குவரத்து வாகனங்களுக்கும், நாளாந்தம் 750 லீட்டர் டீசல் வழங்குவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது தனியார் 750 வழித்தட சேவை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 671f3afd3a539
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளுடன் போராட்டத்தைத் தொடரலாம்: விமல் வீரவங்சவின் சத்தியாக்கிரகத்திற்கு நீதிமன்றம் அனுமதி!

பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள ‘இசுருபாய’ கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றக்...

image 38043798ff
செய்திகள்இலங்கைபிராந்தியம்

39 முறை வன்முறையில் ஈடுபட்ட பௌத்த துறவி: மனைவியைக் கத்தியால் மிரட்டிய குற்றத்திற்காக ஓராண்டுச் சிறை!

தொடர்ச்சியாகத் தனது மனைவியைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வந்த 66 வயது பௌத்த துறவி ஒருவருக்கு,...

04 7
இலங்கைசெய்திகள்

ஸ்னைப்பர் துப்பாக்கியுடன் சிவில் உடையில் நடமாட்டம்: பழைய பொலிஸ் தலைமையகம் அருகே 2 கமாண்டோக்கள் கைது!

கொழும்பிலுள்ள பழைய பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக, கருப்புத் துணியால் சுற்றப்பட்ட ஸ்னைப்பர் (Sniper) துப்பாக்கியுடன் சிவில்...

image 55b1ad95b8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய திலினி பிரியமாலிக்கு பிடியாணை: ஹோமாகம நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல பெண் தொழிலதிபர் திலினி பிரியமாலிக்கு எதிராக...