இலங்கைஏனையவைசெய்திகள்பிராந்தியம்

பொலிஸ் அதிகாரி வீட்டில் உணவுப் பொருட்கள் திருட்டு!

Share
B shadow fig in front of house 1
Share

பொலிஸ் விசேட பணியகத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீட்டுக்குள் பட்ட பகலில் நுழைந்த திருடர்கள், அறையில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களை  கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட் ஆகிய உணவுப் பொருட்களே கொள்ளையிடப்பட்டுள்ளன என கோனாபீனுவல பொலிஸார் தெரிவித்தனர்.

ரன்மெஹரவத்த பகுதியில் வசிக்கும் குறித்த சார்ஜெண்ட்  இந்நாட்களில் அம்பாறையில் கடமையாற்றுகின்றார்.

அவரது மனைவியும் பிள்ளைகளும் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் ஜன்னலை உடைத்து உள் நுழைந்து,  பொருட்களை கொள்ளையிட்ட பின்னர் அறையை தீயிட்டுவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயினால் அந்த அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...