721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

30 மற்றும் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் நால்வருக்கும், பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும், அரசில் இணைந்து இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரவிந்தகுமார், வியாஜேந்திரன், சுரேன் ராகவன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களுக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கென தற்போது தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னதாகக்கூட நியமனம் இடம்பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...