வெட்டிப் படுகொலை
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் கொலைக் கலாச்சாரமும் அதிகரிப்பு!!

Share

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கொலைக் கலாச்சாரமும் கோலோச்சியுள்ளது. கடந்த 5 நாட்களுக்குள் மாத்திரம் 7 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், வெட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் உட்பட வெளிநாடுகளில் பதுங்கி வாழும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கட்டத்தல் காரர்களில் உத்தரவுகளுக்கமையவே துப்பாக்கிச்சூட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பரந்தப்பட்ட விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்கு சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படடுள்ளது.

நாட்டில் அண்மைக்காலமாக பெருந்தொகை போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவர்களுக்கு துப்பு – தகவல் வழங்கியவர்களே தற்போது கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என இலத்திரனியல் ஊடமொன்று செய்தி வெளியிட்டுளளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...