Screenshot 20220606 144412 Office
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு!

Share

உலக வளை பாத தினத்தையொட்டி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் எலும்பியல் சத்திரசிகிச்சை நிலையத்தில் 03.06.2022. அன்று humanity &inclusion நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களான தயாசிவம் கோபிசங்கர், பரமலிங்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரும் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் அருள்மொழி, மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரி குமரவேல் ஆகியோர் கலந்துகொண்டு பிறவி வளை பாதம் தொடர்பான தமது அனுபவங்களையும் விழிப்புணர்வு கருத்துக்களையும் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

குழந்தைகளுக்கான சிகிச்சை முறை பற்றியும் சிகிச்சையின்போது ஏற்படும் சவால்கள் பற்றியும் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களான தயாசிவம் கோபிசங்கர், பரமலிங்கம் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் பிறவி வளை பாதமானது ஆரம்பத்திலேயே இனங்கண்டு சரியான முறையில் தொடர்ச்சியான சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றாக குணமாக்கக் கூடியது எனவும் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைமுறை தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வழங்கப்படுகின்றது எனவும் இது யாழ் மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் எனவும் கூறினர்.

முக்கிய நிகழ்வாக குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.அதில் பங்களித்த பங்குபற்றிய அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது.
வளை பாதம் சிகிச்சை முறை மூலம் குணமடைந்த சிறுவர்களில் பெற்றோர்கள் இறுதியாக தமது அனுபவத்தினை தற்போது சிகிச்சை பெறும் குழந்தைகள் பெற்றோர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.இதன்போது அவர்கள் எலும்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...