maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒழுக்காற்று நடவடிக்கை கிடையாது! – மைத்திரி பல்டி!

Share

“கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவை மீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட கூட்டமொன்று நேற்று முன்தினம் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்றது.

நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர , ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ,துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது , ” கட்சியில் நாங்கள் வகித்த பதவி பறிக்கப்பட்டுவிட்டதென நீங்கள் அறிக்கை விடுத்துள்ளீர்கள். அப்படி அறிக்கை விடுத்து, எதற்காக சந்திப்புக்கு அழைக்க வேண்டும், இனி நாங்கள் வரபோவதில்லை. ” என்று நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

” நான் அந்த அறிக்கையை விடுக்கவில்லை. கட்சி பொதுச்செயலாளர்தான் விடுத்துள்ளார். எது எவ்வாறு அமைந்தாலும், உங்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.” என மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சர்வக்கட்சி அரசு என்ற யோசனை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குரியது. எனவே, அதனை ஆதரித்து அமைச்சு பதவிகளை பெறுவதில் தவறில்லை என இதன்போது உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...