IMG 20220605 WA0026 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இயக்கச்சி காணியில் தீ! – பயன்தரு மரங்கள் நாசம்!

Share

கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பயன்தரு மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

குறித்த பகுதியில் உள்ள காணியில் தென்னங்கன்றுச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை வளர்ந்து பயன் தருகின்ற தருவாயில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் பல தென்ணைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த தீப்பரவல் தொடர்பாக பிரதேசவாசிகள் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவிற்கு தெரிவித்ததை அடுத்து கரைச்சி பிரதேச சபையினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும் தீப் பரவல் குறித்த காணியில் காணப்பட்ட பனை மரங்களில் பரவியதால் பனைமரங்களில் ஏற்பட்ட தீ பயன்தரு தென்னை மரங்களில் பரவி தென்னை மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

இதனால் குறித்த காணி உரிமையாளர்கள் பெரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

IMG 20220605 WA0025

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...