இலங்கை
அனலைதீவில் மனித எலும்புக்கூடு மீட்பு!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அனலைதீவுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அனலைதீவின் வெளிச்சவீட்டுப் பகுதியிலேயே குறித்த எச்சங்கள் கரையொதுங்கியுள்ளன.
மிக நீண்டகாலத்துக்கு முற்பட்டதாக அது இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே பிந்திய தகவல்களின்படி குறித்த மனித எலும்புக்கூடு எச்சங்கள் மீட்கப்பட்டு படகு ஒன்றில் பொலிஸாரால் ஊர்காவற்றுறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login