பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சுப்பர்மடத்தில் கோஷ்டி மோதல்! – ஐவர் வைத்தியசாலையில்

Share

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழிலில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டது எனவும், இதில் வாள், கொட்டன்கள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டடியைச் சேர்ந்த சிறிமுருகன் சிறிகஜன் (வயது – 23), வியாபாரிமூலையைச் சேர்ந்த தேவநாயகம் பிரேம்ராஜ் (வயது – 30), சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்தவர்களான ஜீவநாயகம் ராஜீவன் (வயது – 26), பொன்னம்பலம் ரகுநாதன் (வயது- 39), தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது – 41) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...