ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அலரி மாளிகை செல்லமாட்டேன்! – பிரதமர் ரணில் தீர்மானம்

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தின் செலவை நூற்றுக்கு 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்து அதுதொடர்பான பணிப்புரைகளையும் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் செலவை குறைப்பது தமக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் அலரி மாளிகைக்குச் செல்லாமல் ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து கடமைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் குடியிருப்பதற்காக செல்லவில்லை என்றும் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டுமே அலரி மாளிகையை உபயோகப் படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...