ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அலரி மாளிகை செல்லமாட்டேன்! – பிரதமர் ரணில் தீர்மானம்

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தின் செலவை நூற்றுக்கு 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்து அதுதொடர்பான பணிப்புரைகளையும் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் செலவை குறைப்பது தமக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் அலரி மாளிகைக்குச் செல்லாமல் ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து கடமைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் குடியிருப்பதற்காக செல்லவில்லை என்றும் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டுமே அலரி மாளிகையை உபயோகப் படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...