Connect with us

அரசியல்

ஜனநாயகத்துக்காக இழந்தவை ஏராளம்! – மீண்டும் ஒடுக்க முயற்சி என்கிறார் அநுர

Published

on

Anura Kumara Dissanayaka 1000x584 1

ஜனநாயகத்துக்காக ஜே.வி.பி. இழந்தவைகள் ஏராளம். 1983 இல்போன்று ஜே.வி.பியை ஒடுக்குவதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்படுகின்றது – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

1994 இல் ஜனநாயக அரசியலுக்குள் மீண்டும் பிரவேசித்தோம். அன்று முதல் இன்றுவரை ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவுமே போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஜனநாயக வியூகத்துக்குள் ஆழமாக காலூன்றி, அந்த வழியில் அரசியல் பயணத்தை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பு.

ஜனநாயக வழியில் பயணிப்பதால் எமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். 94 இற்கு பிறகு அரசியல் காடையர்களால் – குண்டர்களால் எமது தோழர்கள் படு கொலை செய்யப்பட்டனர். இவற்றுக்கு பதிலடியாக – ஒரு கல்வீச்சு தாக்குதலைக்கூட நாம் நடத்தியது கிடையாது. ஏன் ஜனநாயகத்துக்காகவே இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டோம்.

ஜனநாயகத்தை பலப்படுத்த 17 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த அழுத்தம் பிரயோகித்தோம். அதன்பின்னர் 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதற்காக நல்லாட்சியின்போது தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்தோம்.

1983 இல் கறுப்பு ஜுலையை திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளை தடைசெய்தனர்.

ஜே.ஆரின் ஜனநாயக விரோத அரசியலுக்கு எதிராக துணிந்து போராடினோம்.

முறைகேடாக நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம்.

இவ்வாறு ஜனநாயகத்துக்காக இன்றும் போராடினோம். இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றோம். ஊழல், மோசடிகளுக்கு எதிரான எமது குரல் தொடர்ந்தும் ஓங்கி ஒலிக்கும். எம்மை மெளிக்க வைக்க முடியாது.

88-99 இல் அமைச்சர்களின் வீடுகளில் வதை முகாம்கள் இருந்தன. தற்போதைய அமைச்சர்களும் தற்போது பட்டியலை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அமைதியாக போராடும் மக்களை தாக்கினால், அந்த இடத்தில் நாம் நிற்போம். வன்முறையாளர்கள் மக்களை தாக்கும்போது, வேடிக்கை பார்க்க முடியாது.

1983 இல் ஜே.வி.பிக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சியை மீண்டும் அரங்கேற்ற முற்படுகின்றனர்.

மே- 09 சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும். அதற்கு முகங்கொடுப்பதற்கு தயார்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்12 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...