Human Rights
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Share

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நாளை(13) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று ஆஜரான பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் முன்வைத்த விடயங்களின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது .

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம், அவ்வேளையில் அரசியல் வாதிகளுடன் இருந்த தொடர்பு உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விசாரணை நடத்தப்படவுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான தேசபந்து தென்னகோன், பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார். எனவே, அவர் நாளை முன்னிலையாவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 9
செய்திகள்இந்தியா

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடி: ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை’ அமல்படுத்தியது மத்திய அரசு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க,...

30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...