Sarath Fonseka
அரசியல்இலங்கைசெய்திகள்

பொன்சேகாவுக்கும் ஜனாதிபதி அழைப்பு!!

Share

இடைக்கால அரசில் அமைச்சு பதவியொன்றை பொறுப்பேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

இதன்படி சட்டம், ஒழுங்கு அமைச்சை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் பொன்சேகா இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.

பொன்சேகாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவரிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்.

இதன்படி தெற்கு அரசியலில் இன்றைய தினம் முக்கிய சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

போரின்போது ஒன்றிணைந்து செயற்பட்ட பொன்சேகாவும், கோட்டாவும் 2010 இல் பிரிந்தனர். இந்நிலையில் மீண்டும் சங்கமிக்க முற்படுகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...

05 16
செய்திகள்இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல்: இலங்கை நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) விபத்தில்...

04 15
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மூளையாகச் செயல்பட்டவரின் பெயரை வெளியிடப் போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரியின் (Mastermind) அடையாளத்தை எதிர்வரும்...

03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு...