20220511 150056 scaled
இலங்கைசெய்திகள்

சிறையில் வைரஸ் காய்ச்சல்! – தமிழ் அரசியல் கைதிகள் பாதிப்பு

Share

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற இன்றைய ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன்
இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்பை உணர ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வைத்தியம் பெறுவதற்கான மருந்துகள் கூட பெரும் தட்டுப்பாடாக உள்ளது.

மேலும் தற்போது சாதாரணமான பனடோலைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. அரசியல் கைதிகளின் உறவினர்கள் இதனை எமக்கு தெரியப்படுத்தி கவலைப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், அரசாங்கம் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்
கருத்திற்கொண்டு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் பலரும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இவ்வாறான நோய்களினாலும் மருத்துவ ரீதியாக புறக்கணிக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டை சூறையாடி பொருளாதாரத்தை நலிவடையச் செய்த நபர்கள் தப்பியோடக்கூடிய சூழலில் சாதாரண குற்றம் செய்ததற்காக 10 தொடக்கம் 26 வருடங்கள் வரை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...