IMG 20220508 WA0039
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை! – கொடிகாமத்தில் எதிர்ப்பு

Share

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் எதிர்பபு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு கள்ளுத் தவறணை அமைப்பதற்கு தற்காலிக தடையை விதித்துள்ளனர்.

கொடிகாமம் வடக்கு மக்கள் வாழும் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கள் விறபனை நிலையமான கள்ளுத் தவறணை இயங்கி வருகிறது.

ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்த தவறணை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஒன்று சேர்ந்து எதிர்பினை வெளியிட்டனர்.

இப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்குமூலத்தை பதிவுசெய்து கொண்டனர்.

வாக்குமூலத்தை பதிவுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த தவறணைக்கான கட்டடப் பணிகளை உடன் நிறுத்துமாறு தற்காக தடையை அறிவித்தார்.

மக்களின் வாக்குமூலத்திற்கு அமைய நாளையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அதுவரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளார். இதனையடுத்து மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தப் பகுதியில் வசிக்க முடியாதவாறு தகாத வார்த்தைப் பிரயோகம், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாதவாறு மது போதையில் உள்ளவர்களின் அடாவடிகள் என பல வகையான இன்னல்களுக்குத் தாம் முகம் குடுப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

10 வருடங்களாக இயங்கும் தவறணைக்கு மலசலகூடம் இன்மையால் மதுப்பிரியர்கள் வீதிகளில் சிறுநீர் கழித்தல் மற்றும் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகளினால் வீதியால் பயணிக்க முடியவில்லை, அயலில் வசிக்க முடயவில்லை குறிப்பாக பெண்கள், மாணவர்கள் இப் பகுதியால் பயணிக்க முடியவில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

IMG 20220508 WA0040

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...

images 2
செய்திகள்இந்தியா

இந்தியத் தொழிலதிபர் மகனின் ஆடம்பரத் திருமணம் இலங்கையில்: சுற்றுலாத் துறைக்கு ரூ.35 மில்லியன் வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத்...

The earthquake in Uttarkashi occurred around 5km b 1694420274586 1701495114647
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

பங்களாதேஷ் நாட்டில் 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவின்...

articles2FdhDDZcYNvXEcbQ3844QF
உலகம்செய்திகள்

வியட்நாம் வெள்ளத்தில் 55 பேர் பலி: 52 ஆயிரம் வீடுகள் மூழ்கின; 32 இலட்சம் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன!

வியட்நாமில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக...