Anura Kumara Dissanayaka
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார்! – ஜே.வி.பி அறிவிப்பு

Share

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி திறந்த மனதுடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,

” அரசாங்கமானது அரச வருமானத்தை அதிகரிப்பதற்கோ, ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவோ, நீண்ட காலமாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை வருமானம் ஈட்டக் கூடிய அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

உற்பத்திகளை அதிகரிக்கவோ திட்டங்களை தயாரிக்கவோ முறையான வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை

அந்த வகையில் வருடக் கணக்கில் தொடர்ந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடியிலேயே நாடு தற்போது அகப்பட்டுள்ளது.முறையான பொருளாதார திட்டங்கள் இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாட்டு மக்கள் ஏழ்மையில் இருந்தாலும் ஆட்சியாளர்கள் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். இது எப்படி நடந்தது. நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான

பணத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமையே அதற்கான காரணமாகும். அதன் பாதிப்பையே மக்கள் இப்போது அனுபவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் பலவற்றை தவறானவை என்று இப்போது நிதியமைச்சர் ஏற்றுக்கொள்கின்றார்.இந்த தவறான தீர்மானங்கள் தெரியாமல் நடந்தவையா? இல்லை. தெரிந்தே நடந்துள்ளன. இதனை சிறிய தவறாக கருத முடியாது. இதற்கு ஜனாதிபதியும் அதேபோன்று அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும். நிதியமைச்சரும் தமது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. நாட்டை பொருளாதார ரீதியில் சீர்குலைத்துவிட்டு தவறு நடந்துள்ளது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு காரணமான ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...