இலங்கை மீனவர்கள் கைது
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது!

Share

இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியக் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த படகும் இந்தியக் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கைதான 6 இலங்கை மீனவர்களும், திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...