sajith team 1000x600 1
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

தென்னிலங்கை மே தின கூட்டங்களை ஆக்கிரமித்த ‘கோட்டா கோ ஹோம்’ கோஷம்!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்களான அரசும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தியே தெற்கு அரசியல் களத்தில், எதிரணிகளின் மே தின பேரணிகளும், கூட்டங்களும் இடம்பெற்றன.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள்மீது சரமாரியாக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன. அத்துடன், மஹிந்த ராஜபக்ச இல்லாத இடைக்கால அரசை ஏற்கமுடியாதெனவும் மொட்டு கட்சி திட்டவட்டமாக அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அகட்சியின் பிரமுகர்கள், ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஜனாதிபதி தலைமையிலான சர்வக்கட்சி இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது எனவும் இடித்துரைத்தனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான மே தின பேரணியும், கூட்டமும் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, புதிய அரசை அமைப்பதற்கான போராட்டம் தொடரும் என அறிவித்தார். கட்சி தலைமையகத்திலும் மே தனி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் நான்கு மாவட்டங்களை மையப்படுத்தியமாக அமைந்தது. கொழும்பில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரையாற்றிய கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டார்.

11 கட்சிகளில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தனியே மே தின கூட்டத்தை நடத்தின. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியும் பத்தரமுல்லையில் தனி நிகழ்வை நடத்தியது.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதின கூட்டத்தையும், பேரணியையும் நடத்தவில்லை. எனினும், மொட்டு கட்சிசார்பு தொழிற்சங்கத்தால் மே தின கூட்டமொன்று நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மொட்டு கட்சி உறுப்பினர்கள், அரசு பதவி விலகாது எனவும், மஹிந்த இல்லாத சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்கமுடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்தனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்களாலும் மே தின நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

#SriLankaNews #Artical

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...