வேலணை பிரதேச சபை e1651155719223
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரசுக்கு எதிராக வேலணை பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

Share

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நிலவும் யாழ். வேலணை பிரதேச சபையில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சபைக்குச் சென்றிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் இந்தச் செயற்பாடு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பின்னர் ஆளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்தனர்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு காரணமான ஜனாதிபதியும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share

1 Comment

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...