protest
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச கல்வியகத்துடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்!

Share

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் பலரும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் சர்வதேச கல்வியகத்தின் உயர்நிலைக் குழுவுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பள்ளிசெல் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலநிலை, கல்விக்கான அதிகரித்த செலவீனம், போக்குவரத்து சிரமங்கள், அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் துயரநிலை போன்ற பல்வேறு விடங்கள் குறித்து எடுத்தியம்பப்பட்டுள்ளது.

ZOOM மூலமாக நடைபெற்ற இந்தக் கருத்துப் பகிர்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகரும், சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநருமான திரு.த.மகாசிவம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் சர்வதேச பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளருமான திருமதி. ஈ.ஜெ.மகேந்திரா, சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், சங்கத்தின் சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர் சி.சசிதரன், சங்கத்தின் வடக்கு மாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் ஏ.பாலசிங்கம் ஆகியோரோடு பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் கல்விக்காக பெண்களின் பங்களிப்பு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் உரையாடப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களின் போசாக்கு நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இது போன்று முன்பு நடைபெற்ற கலந்துரையாடல் மூலமே நிறுத்தப்படவிருந்த உலக உணவுத்திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...