protest
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேச கல்வியகத்துடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்!

Share

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் பலரும் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் சர்வதேச கல்வியகத்தின் உயர்நிலைக் குழுவுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடியுள்ளனர்.

இக் கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பள்ளிசெல் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அவலநிலை, கல்விக்கான அதிகரித்த செலவீனம், போக்குவரத்து சிரமங்கள், அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களின் துயரநிலை போன்ற பல்வேறு விடங்கள் குறித்து எடுத்தியம்பப்பட்டுள்ளது.

ZOOM மூலமாக நடைபெற்ற இந்தக் கருத்துப் பகிர்வில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகரும், சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநருமான திரு.த.மகாசிவம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் சர்வதேச பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளருமான திருமதி. ஈ.ஜெ.மகேந்திரா, சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன், சங்கத்தின் சிரேஸ்ட துணைப் பொதுச் செயலாளர் சி.சசிதரன், சங்கத்தின் வடக்கு மாகாணச் செயலாளர் ஜெ.நிஷாகர், சங்கத்தின் மத்திய மாகாண செயலாளர் ஏ.பாலசிங்கம் ஆகியோரோடு பெண்கள் வலையமைப்பின் சிரேஸ்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் கல்விக்காக பெண்களின் பங்களிப்பு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் உரையாடப்பட்டதோடு, பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவர்களின் போசாக்கு நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இது போன்று முன்பு நடைபெற்ற கலந்துரையாடல் மூலமே நிறுத்தப்படவிருந்த உலக உணவுத்திட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் மீண்டும் செயற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...