Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனைக்கு கட்டுப்பட்டாலே சந்திப்பு! – சுதந்திரக் கட்சி விடாப்பிடி

Share

தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த 05 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எடுத்தது.

எனினும், அக்கட்சியின் சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு வழங்கி, இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

இவ்விருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் நாளை(29) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசு அமைப்பது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அரச மற்றும் சுயாதீன அணிகளுக்கு ஜனாதிபதி நாளை அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...