சன்ன ஜயசுமன
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவால் மருத்துவ உதவிகள்!

Share

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதை இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதி செய்துள்ளார். 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று, இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும், இது எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைப்போல, 34 கோடி இலங்கை ரூபா மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை, இந்தோனேஷியாவும் அனுப்பவுள்ளது என்றும், அது ஒரு வாரத்துக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SriLanka&IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...