இலங்கை
குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கேகாலை மாவட்டம், ஹெம்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெம்மாதகம, தும்புலுவாவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login