Prasanna Ranatunga 44 scaled
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – விரைவில் நீதி வழங்கப்படும் என்கிறார் பிரசன்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் – என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 735 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 196 பேர் சிறையில் உள்ளனர். 19 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக விசாரணைகள் நிறைவுபெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 453 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரிகளின் சொத்துகளும், தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

நிலாந்த ஜயவர்தன எப்படி அரச சாட்சியாளராக மாறினார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். முன்னாள் சட்டமா திபர் தபுல என்பவரே அவரை அரச சாட்சியாளராக மாற்றினார். அந்த சட்டமா அதிபர் ஓய்வுபெறும் தருவாயில்தான், இந்த தாக்குதல் சூழ்ச்சி என்ற கருத்தை பரப்பினார். அவருக்கு பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதால் அவ்வாறு செய்திருக்கலாம்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள, பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...