மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் சதியே! – நினைவேந்தலில் பேராயர் சுட்டிக்காட்டு

Share

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு அப்பால் அரசியல் சதி இருக்கின்றது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று நாட்டின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இடம்பெற்றன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவுறுத்தலின் பேரில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பிரதான நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. சர்வமதத் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது பேசிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பிண்ணனியில் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு அப்பால் அரசியல் சதி இருக்கின்றது. அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் அரசும் சட்டமா அதிபர் திணைக்களமும் பின்வாங்குகின்றன” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...