தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாவை, வளைத்து போடுவதற்கான முயற்சியில் ஆளுந்தரப்பு இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று பேரமாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அதாவுல்லா, அரசுக்கு ஆதரவு வழங்கினார்.
எனினும், 11 கட்சிகளின் கூட்டணியில் தற்போது அவர் அங்கம் வகிக்கின்றார். அரசுக்கான ஆதரவையும் விலக்கிக்கொண்டுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு ஆளுந்தரப்பு வலை விரித்துள்ளது.
அரசுக்கான ஆதரவை மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment