கார் விபத்து
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கார் விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபச் சாவு!

Share

திருகோணமலை – ஹொரவப்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

அத்துடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

நேற்றிரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததுடன், 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களில் உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் மேலும் ஒருவரும், மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அத்துடன் 4 பேர் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....