fuel price
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை!

Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகையான டீசல்) 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அனைத்து வகையான) 35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது விலை உயர்வு இதுவாகும்.

அத்துடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் விலை உயர்வானது, ஏனைய பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...