gotta
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகச் சொன்ன கோட்டா! – பிடிவாதம் பிடிக்கும் ஆளுங்கட்சியினர்

Share

அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளில் இரண்டை ஆளுங்கட்சியினர் ஏற்க மறுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியால் முன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலகி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முதல் யோசனை.

இதற்கு மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொகுகே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், சரத் வீரசேகர இந்த யோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்தாக பிரதமர் பதவி விலகி, அரசை நடத்துவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதல் என்பது இரண்டாவது யோசனையாகும். இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆளுங்கட்சிவசம் 113 என்ற சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுங்கட்சியினர் உடன்படவில்லை.

நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல்தான் நிறைவடைந்துள்ளது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...