IMG 20220416 WA0003
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டு. மாநகர சபையில் ஜேர்மன் எம்.பி.

Share

“இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்திருப்பதன் காரணத்தால் மத்திய அரசின் மூலமான அபிவிருத்திகளை மட்டக்களப்பு மாநகர சபை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மட்டு. மாநகர சபையின் அபிவிருத்தியில் ஜேர்மன் பங்காளியாக இணைந்துகொள்ள வேண்டும்.”

– இவ்வாறு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரணபவன் கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் மோஹாத் இன்று மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போதே மாநகர சபையின் மேயர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

ஜேர்மன் எம்.பி. இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மாநகர சபைக்கு உடன்படிக்கையின் கீழ் 2003ஆம் ஆண்டு அன்பளிப்பு செய்யப்பட்ட வாகனங்களையும் பார்வையிட்டார்.

குறித்த வாகனங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றமை தொடர்பில் மேயருக்குத் தனது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாநகர சபையின் மண்டபத்தில் மாநகர சபை மேயர், உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கடந்த காலத்தில் ஜேர்மன் முனீச் மாநகர சபையால் மட்டக்களப்பு மாநகர சபையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சரவணபவன், எதிர்காலத்தில் ஜேர்மன் அரசு ஊடாக ஒப்பந்தங்களைச் செய்து மேலும் அபிவிருத்திப் பணிகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 11
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...

24 670f93e6eb8ad
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது: வாகன முறைகேடு தொடர்பாக CID நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்று (30) கைது...

25 6949732ef2e8e
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல்: ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

‘டித்வா’ (Titli) புயல் அனர்த்தத்தின் போது முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் மூலம் பொதுமக்களின்...

images 1 9
செய்திகள்அரசியல்இலங்கை

மாணிக்கக்கல் ஏற்றுமதியில் பாரிய வருமான இழப்பு: சட்டவிரோதப் போக்கைக் கட்டுப்படுத்த புதிய வரி நடைமுறை!

இலங்கையில் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையில் நிலவும் நிருவாகச் சிக்கல்கள் காரணமாக, நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய...