கோட்டா நாமல்
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா மௌனம் கலைய வேண்டும்! – நாமல் வலியுறுத்து

Share

மக்கள் ஏன் அரசின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்குப் புரிகின்றது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி., ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மௌனம் கலைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இருப்பினும், இப்போது கோபத்துக்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதியும் அரசும் நாட்டுக்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.

அத்தோடு, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும், ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றது. அது நெருக்கடியை மேலும் உருவாக்கக்கூடும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...