சிறில் காமினி
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி முகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபையும் ஆதரவு!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கத்தோலிக்க சபையும் இருக்கின்றது என்று மேற்படி சபையின் ஊடகப்பேச்சாளர் வணபிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சபையும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பின்னணியில் இருக்கின்றது எனவும், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதுவித மதம் சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க போவதில்லை என்றும் வணபிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

அதேவேளை , உயிர்த்த ஞாயிறு மத அனுட்டானங்களை காலிமுகத்திடல் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...