அரசியல்
கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகருக்கு
அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login