london aerial cityscape river thames 1
செய்திகள்உலகம்

ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியை இடைநிறுத்தியது உலக வங்கி!!

Share

ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியை இடைநிறுத்தியது உலக வங்கி!!

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கான நிதியுதவிகளை உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியமை, ஆப்கானிஸ்தானுடைய அபிவிருத்தி வாய்ப்புகளில் குறிப்பாக பெண்களுக்கானவற்றில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான நிதி வழங்கல்களை சர்வதேச நாணய நிதியம் இடைநிறுத்திய சில தினங்களில், உலக வங்கியால் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் அமெரிக்காவிலுள்ள சொத்துக்களை பைடன் நிர்வாகம் முடக்கியுள்ளது.

இதனிடையே, நாட்டை விட்டு வௌியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் என ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த 10 நாள்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

26 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயணிகள் பயன்படுத்துவது பேருந்துகள் அல்ல லொறிகளே..! பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு...