maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை!

Share

” ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை உருவாக வேண்டும். அப்போதுதான் இடைக்கால அரசை மக்கள் ஏற்பார்கள்.” என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னர், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சுயாதீன அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவையை உருவாக்கி – இடைக்கால சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி அப் பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிப்பதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

பின்னர் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின்போதும் இவ்விவகாரங்கள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

#SRiLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...

25 692d897a24140
செய்திகள்இலங்கை

பேரழிவு குறித்து அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி குற்றவியல் வழக்குத் தொடரத் திட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் அறிவிப்பு!

இலங்கையில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை (Disaster Situation) மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மனிதாபிமான உதவி: கைதிகள் தங்களின் மதிய உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெருந்தொகையான கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்...

images 15
செய்திகள்இலங்கை

வடமாகாணத்தில் பேரழிவு மீட்புக்குப் பிந்தைய சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார...