as
அரசியல்இலங்கைசெய்திகள்

“கோட்டா வீட்டுக்கு போ” – வெளிநாடுகளில் திரண்ட இலங்கையர்கள்

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் அரசையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட மக்கள், “கோட்டா வீட்டுக்கு போ” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகச் சுயமாகத் திரண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...