1 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரச சர்வாதிகாரத்துக்கு எதிராகக் கொழும்பில் எதிரணி பெரும் போராட்டம்!

Share

மக்கள் விரோத அரசின் தன்னிச்சையான சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எனினும், அங்கிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி ஆரம்பமான பேரணியைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

சுதந்திர சதுக்கத்துக்குச் செல்லும் சகல நுழைவு வீதிகளையும் வீதித்தடைகள் மற்றும் காவலரண்கள் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாருடன் பெருமளவு விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். எதிரணியினரின் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னோக்கிச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்புத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் இவ்வாறு எதிரணியினர் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுப்பது முறையற்றது எனவும், அதனால் அதைத் தடுத்து நிறுத்தினோம் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....