vavuniya 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சத்தம் சந்தடியின்றி வடக்கு மாகாண மருத்துவமனைகள் மத்தி வசமாகினவா?

Share

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடப்பில்போடப்பட்டிருந்த நிலையில், திடீரென வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைக்கு நேற்றுமுன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மாகாண அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட 9 மருத்துவமனைகளை மத்திய அரசின் கீழ் உள்வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 4 மருத்துவமனைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சி. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மருத்துவமனைகளே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. மாகாண அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போதும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நாடு முழுவதும் அடையாளப்படுத்தப்பட்டிருந்த 9 மருத்துவமனைகளில் வடக்கு மாகாணத்தின் 4 மருத்துவமனைகள் தவிர்ந்து தென்பகுதியிலுள்ள 5 மருத்துவமனைகளில் 4 மருத்துவமனைகள் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு, மத்திய அரசால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் கடமைக்கு சமூகமளித்தனர். இதேவேளை அங்கு மாகாண நிர்வாகத்தால் கேள்வி கோரலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களும் கடமையிலிருந்தனர்.

மாகாண நிர்வாகத்துக்கு எந்தவொரு முன்னறிவித்தலும் வழங்கப்படாமல் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மாகாண மருத்துவமனைகளை சத்தம் சந்தடியில்லாமல், மாகாண நிர்வாகத்துக்கு அறிவிக்காமல் மத்திய அரசின் கீழ் உள்வாங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வென்னப்புவையில் அதிரடி: 800 கிலோவிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான சுறா மீன்களுடன் 7 சந்தேகநபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள...

im 83941943
செய்திகள்உலகம்

சீன இராணுவத்தில் அதிரடி சுத்திகரிப்பு: மிகச்சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யௌஷியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள...

Untitled 113 2
இலங்கைசெய்திகள்

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப்...

sajith rw 2 800x533
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் மற்றும் ஐதேக தலைவர்களுக்கு இடையில் தீர்க்கமான சந்திப்பு!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...