இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Share

கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இவ்வருடம் (2022) இதுவரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 26 ஆகும்.

இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியாவாகும். அந்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 231 ஆகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...