tamilnadu
இந்தியாசெய்திகள்

நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்கள்! – மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

Share

இந்திய மத்திய அரசின் முறையற்ற பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் திட்டங்கள் ஆகியவற்றை கண்டித்து நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முதல் இந்த இந்த வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.

குறித்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

“வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என மத்திய-மாநில அரசுகள் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையிலும் குறித்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.சார்பான தொழிற்சங்கங்க உறுப்பினர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில், அரச பஸ் சேவைகள் இடம்பெறாத நிலையில், தனியார் பஸ் சேவைகள் மற்றும் இடம்பெற்றன. இதனால் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கிகள் உள்ளிட்ட வங்கி சேவைகள்
அரசு அலுவலக பணிகல், தபால், வருமானவரித்துறை, சுங்கம், கலால் மற்றும் மின்சாரத்துறை பணிகள் ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

#IndiaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...