IMG 20220328 WA0009
அரசியல்இலங்கைசெய்திகள்

பஸிலை வீழ்த்த முயற்சி! – நடக்காது என்கிறார் ரோஹித

Share

” பஸில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர். அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது. அதற்கு நாம் இடமளிக்கவும்மாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பஸில் ராஜபக்சதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இலங்கையில் இன்று பலம் வாய்ந்த கட்சியாகும். தற்போதுகூட மக்களை திரட்டும் சக்தி எம்மிடம் உள்ளது. பஸில் ராஜபக்ச சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவரை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்றனர். அது நடக்காது. 2015 இல் ராஜபக்சக்களை வீழ்த்த பார்த்தனர். அதுவும் முடியாமல் போனது. நிச்சயம் நாம் நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவோம்.

விமல், கம்மன்பில போன்றவர்களே அரசின் பயணத்தை குழப்பினர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....