ஜி.எல்.பீரிஸ்
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழரைக் கோட்டா கைவிடமாட்டார்! – சம்பந்தனுக்குப் பீரிஸ் பதில்

Share

“சிங்கள – பௌத்த மக்களின் அமோக வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவர் தமிழ் மக்களைக் கைவிடமாட்டார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளார்.”

– இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் பேச்சை நடத்த வேண்டும். சந்தேகப் பார்வையில் அவர்கள் செயற்படக்கூடாது” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஆக்கபூர்வமான பேச்சை நடத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்து வைப்பார்” எனவும் அவர் உறுதியளித்தார்.

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்; ஏமாறத் தயாரில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பதில் வழங்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...