IMG 20220322 WA0041
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கிலிருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

வடக்கிலிருந்து ஒரே நாளில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் தப்பிச் சென்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மன்னாரிலிருந்து 3 படகுகளில் தமிழகம் சென்றுள்ளனர்.

நேற்று ஒரு படகில் புறப்பட்ட 6 பேர் இன்று காலையும், இன்று பகல் இரு படகுகளில் புறப்பட்ட மேலும் 10 பேர் மாலையும் சென்றடைந்துள்ளனர்.

முதல் 6 பேரும் தனுஷ்கோடிக்கு அடுத்த மூன்றாம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

ஏனைய 10 பேரும் இராமேஸ்வரம் – அரிச்சல் முனையிலுள்ள நான்காம் மணல் திடலில் தரை இறங்கியுள்ளனர்.

இவ்வாறு சென்ற 16 பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...