nimal lanza 1
அரசியல்இலங்கைசெய்திகள்

நிமல் லான்சா பதவி துறப்பின் பின்னணி என்ன?

Share

பஸில் ராஜபக்சவின் மிகவும் நெருங்கிய சகாவாக கருதப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா, தான் வகித்துவந்த இராஜாங்க அமைச்சு பதவியை இன்று அதிரடியாக இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசின் செயற்பாடுகளை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவந்த நிமல் லான்சாவை பஸில் தரப்பு ஓரங்கட்டியது. அதுமட்டுமல்ல இராஜாங்க அமைச்சு பதவியை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டதால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன் அடிக்கடி முரண்பட வேண்டிய நிலைமை லான்சாவுக்கு ஏற்பட்டது.

இதனால் அமைச்சுக்கு செல்வதை சுமார் ஒரு மாத காலமாக லான்சா தவிர்த்து வந்தார். இதற்கிடையில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரால் நிமல் லான்சாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நிமல் லான்சா பதவி துறந்துள்ளார் .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் நீதி நிலைநாட்டப்படாமை தொடர்பிலும் கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா கடும் அதிருப்தியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...