3 11
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்துக்கு வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு பொலிஸார் அடாவடி! – மட்டுவில் பகுதியில் பதற்றம்

Share

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார்.

அந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

அதில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் வழிமறித்த பொலிஸார் , வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாத வாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில் , சாரதியை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை , மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

3 13 3 10 3 14 3 12 3 9

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...

25 68fb2b3437459 1
இலங்கைசெய்திகள்

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை வழக்கு: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் காட்டுப் பகுதியில் மீட்பு!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புத்தல...

MediaFile
செய்திகள்இந்தியா

ஆந்திராவில் சோகம்: ஏகாதசி தரிசனத்தின்போது நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏகாதசியை...

22 62b8ed5ad030a
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டிக் கட்டணம் திருத்தப்படாது: முறையான ஒழுங்குமுறை இல்லாததே காரணம் – சங்கம் அறிவிப்பு!

எரிபொருள் விலைத் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தவிதத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில...