kayan
செய்திகள்அரசியல்இலங்கை

புலிகளின் தலைவர் துப்பாக்கியாலேயே உயிரிழந்திருக்கலாம்! – பிரபல நடிகரின் பரபரப்பு பேச்சு

Share

“அன்றே விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டைக் கைப்பற்றி, அவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” – இவ்வாறு பிரபல சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தனது முகநூலில் பரபரப்பு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொலியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான், மிகவும் சிந்தித்தே இதனை தெரிவிக்கிறேன். நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டைக் கைப்பற்றி அவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்.

தற்போதைய அரசாங்கத்தை பதவியில் அமரவைக்க கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்காற்றியுள்ளேன். நெற்றில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட மிகக் கொடுமையானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில், நாங்கள் குழப்பமடைந்திருந்தோம். எனினும் அவை அனைத்தும் திட்டமிட்டே நடந்தவை என தற்போது எனக்கு என்னத் தோன்றுகிறது.

நாட்டில் தற்போது அனைத்துக்கும் பற்றாக்குறை. நாட்டு மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். புலிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி முழு நாட்டு மக்களும் உயிர் இழந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நீங்கள் செய்தவை அனைத்துமே போதும். நாட்டு மக்கள் மீது சிறிதளவாயினும் அக்கறை இருந்தால் நாளையே இராஜினாமா செய்துவிடுங்கள் – என்றுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...