WhatsApp Image 2022 03 10 at 10.35.02 PM
செய்திகள்அரசியல்இலங்கை

பஸிலின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டுவிடாதீர்! – மைத்திரிக்கு தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஆலோசனை

Share

சர்வக்கட்சி மாநாடென்பது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் ‘சூழ்ச்சி’ நடவடிக்கையாகும் – என்று கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான ‘தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்’ குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார கூறியவை வருமாறு,

” சவரக்கத்தியில் சவரம் செய்யவும் முடியும், கழுத்தை அறுக்கவும் முடியும். அதுபோலவே இந்த சர்வக்கட்சி மாநாடும். பெயரளவில் சிறந்ததாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பஸிலின் இந்த சூழ்ச்சிக்குள் அக்கப்பட்டுவிடவேண்டாம் என மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

பஸில் தனது சூழ்ச்சி நடவடிக்கையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே, விமல், கம்மன்பில போன்றவர்களை வெளியேற்றியுள்ளார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...