Ali Sabry 1
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம் மூலம் 22 மில்லியன் தரவுகளுக்கு பாதுகாப்பு! – நீதியமைச்சர்

Share

தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவதாக இந்த சட்டத்தை நிறைவேற்றிய நாடு என்ற பெருமை எமக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தமது சேவைகளை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

” தரவு அதிகாரசபை தொடர்பிலும் அதன் தகுதி, தகைமை தொடர்பிலும் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி சுமந்திரனும் சில கருத்துக்களை முன்வைத்தார். உண்மையில் கடந்த அரசாங்கத்தில் நீங்கள் சரியாக செயற்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் கூட கொண்டுவரப்பட்டிருக்காது.

ஊடகவியலாளர்களின் உரிமை தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டு மக்களின் உரிமை, மக்களுக்கான கருத்து சுதந்திரம் என்பது எல்லாம் ஒன்றுதான். ஊடகத்திற்கு என தனியான சுதந்திரம் கிடையாது, ஊடகவியலாளர்கள் சரியானதை தெரிவிக்க வேண்டும்.தேவையில்லாதவற்றுக்கு மட்டுப்படுத்தல்கள் மிக அவசியமானது. அனைத்திற்கும் சுதந்திரத்தை வழங்க முடியாது.” – என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...