Manivannan 1
செய்திகள்இலங்கை

வலிதென்மேற்கு உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு மணிவண்ணன் கண்டனம்!!

Share

வலி தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜிப்ரிக்கோ இளவாலை பொலிசாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர முதல்வர் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ அவர்கள் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எந்த ஒரு கடுமையான குற்றத்தை செய்த ஒருவருக்கு கூட தாக்குவதற்கான அதிகாரம் போலீசாருக்கு இல்லை. இதுவே இலங்கையின் சட்ட ஏற்பாடாக இருக்கின்றது .

ஆனால் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை இவ்வாறு மூர்க்கத்தனமாக இளவாலை போலீசார் தாக்கியிருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு செயல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.

இதற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து போலீசார் மீதும் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் .

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .அத்தோடு இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து பொலிசாரும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஜிப்ரிக்கோ அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தேவையான சட்ட உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....