கோட்டாபய
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? – கோட்டா சீற்றம்

Share

“அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? அமைச்சரவையிலிருந்து இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒன்றில் தாமாக வெளியேற வேண்டும். இல்லையேல் எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை நானே வெளியேற்றுவேன்.”

-இவ்வாறு கடும் தொனியில் எச்சரிக்கையுடன் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று நடத்திய அவசர கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் 69 இலட்சம் மக்களின் ஆணையுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்தேன். எனக்கு ஆணை வழங்கிய மக்களை ஏமாற்றவும் மாட்டேன்; அவர்களுக்குத் துரோகம் செய்யவும் மாட்டேன்.

நாடு இன்று பொருளாதார ரீதியில் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவையில் இருக்கும் சிலர், பொறுப்பிழந்து, பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாகச் செயற்படுகின்றனர். அரசைக் கண்டபடி விமர்சிக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அமைச்சுப் பதவி எதற்கு?

அரசை வீழ்த்துவதுதான் இவர்களின் நோக்கமாக இருந்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது. எமது அரசை எவராலும் அசைக்கவே முடியாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...